மக்களவைத் தேர்தலுக்கு முன் “இந்தியா” கூட்டணி யில் அங்கம் வகிக்கும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி யின் (ஜேஎம்எம்) தலைவரும், முதல் வருமான ஹேமந்த் சோரனுக்கு சுரங்க ஊழலில் தொடர்புள்ளதாக அவரை அமலாக்கத்துறை மூலம் கைது செய்ய மோடி அரசு துடி யாய்த் துடித்து வந்தது. இது வரை ஹேமந்த் சோரனுக்கு 10 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இந்நிலையில், 10-ஆவது சம்மனில், “ஜனவரி 31-ஆம் தேதிக்குள் ராஞ்சியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஹேமந்த் சோரன் ஆஜராக வேண் டும்” என கூறப்பட்டது.
மீண்டும் விசாரணை
சுரங்க ஊழல் வழக்கு தொடர் பாக 9-ஆம் சம்மனில் ஹேமந்த் சோரனின் வீட்டிற்கே சென்று அம லாக்கத்துறை விசாரணை மேற் கொண்ட நிலையில், அடுத்த ஒரு வாரத்திற்குள் சர்ச்சைக்குரிய வகையில் மீண்டும் 10-ஆவது சம் மனை அனுப்பியது. இந்த சம்மன் தொடர்பாக புதனன்று காலை ராஞ்சியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஹேமந்த் சோரன் ஆஜரானார். மாலை 6 மணி வரை தொடர்ந்து 10 மணிநேர மாக ஹேமந்த் சோரனிடம் அம லாக்கத்துறை தொடர் விசாரணை நடத்திய நிலையில், முதல்வர் ஹேமந்த் சோரன் எந்தநேரமும் கைது செய்யப்படலாம் என தக வல் வெளியாகியது.
துணை ராணுவப்படை குவிப்பு
இந்த தகவலை அடுத்து ஜேஎம்எம் கட்சியினர் ஹேமந்த் சோரனின் வீடு மற்றும் கட்சி அலு வலகங்களில் குவிந்தனர். தொட ர்ந்து ராஞ்சியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு ஜேஎம்எம் தொண் டர்கள் போராட்டம் நடத்தினர். மேலும் மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில் ஜேஎம்எம் தொண் டர்களுடன் பொதுமக்களும் போராட்டத்தில் குதித்ததால் ஜார்க் கண்டில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
ஜார்க்கண்ட் மாநிலம் முழு வதும் போராட்டம் நடைபெற்று வரு வதால் ராஞ்சியில் உள்ள ஹேமந்த் சோரன் வீடு, ஆளுநர் மாளிகை மற்றும் அமலாக்கத்துறை அலு வலகத்துக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அங்கு துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட் டுள்ளனர்.
அமலாக்கத்துறை மீது ஜார்க்கண்டிலும் வழக்குப்பதிவு
அமலாக்கத்துறையின் 10-ஆவது சம்மன் தொடர்பாக ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் சட்டத்துறை சார்ந்த ஆலோ சனையை மேற்கொள்ள தில்லிக்கு சென்றார். ஆனால் அமலாக்கத் துறை விசாரணைக்கு பயந்து ஹேமந்த் சோரன் தில்லிக்கு கார் மூலம் தப்பி ஓடிவிட்டதாகவும், இதனால் ஜார்க்கண்டில் குடியரசுத் தலைவர் ஆட்சியை கொண்டு வர வேண்டும் என வழக்கமான பாஜக பொய் புரளிகளை கட்டவிழ்த்து விட்டது. பாஜகவின் இந்த குற்றச் சாட்டுக்கு பின் அடுத்த 5 நிமிடங்க ளில் அமலாக்கத்துறை அதிகாரி கள் தில்லியில் உள்ள ஹேமந்த் சோரன் இல்லத்திற்குள் புகுந்து, அங்கு இருந்த ரூ.35 லட்சம் ரொக் கப் பணம், கார், அரசு ஆவணங் களை எடுத்துச் சென்றனர்.
வழக்கு
இந்நிலையில், தில்லியில் உள்ள தனது வீட்டில் எவ்வித அனு மதி பெறாமல் ரொக்கப்பணம், கார், அரசு ஆவணங்கள் உள்ளிட்டவை களை எடுத்துச் சென்றுள்ளதாக ராஞ்சியில் உள்ள எஸ்சி/எஸ்டி காவல்நிலையத்தில் அமலாக்கத் துறை மீது முதல்வர் ஹேமந்த் சோரன் புகார் அளித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக அம லாக்கத்துறை மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஜார்க்கண்ட் அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஏற்கெனவே லஞ்சம் பெற்ற தாக அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு காவல்துறை.கைது செய்து சிறையில் அடைத்த நிலை யில், ஜார்க்கண்ட் மாநில முதல்வர் வீடு புகுந்தது தொடர்பாக அம லாக்கத்துறை மீது அடுத்தடுத்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது கடும் சர்ச்சையை கிளப்பி வரு கிறது.